சேலத்தை சேர்ந்த ரவுடி சித்தோடு அருகே கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தி மூவர் உள்பட 4 பேர் கைது

கோவை சரக டிஐஜி சசி மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.
சித்தோடு அருகே சேலத்தை சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தி மூவர் பிடிபட்ட நிலையில், இவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா (வயது 35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜான் என்கிற சாணக்கியன் மீது சேலம் மாவட்டத்தில் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தற்போது ஜான் என்கிற சாணக்கியா மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் திருப்பூரில் உள்ள பெரிய பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார். மேலும் இவர் தற்போது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு லோன் தரும் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சேலத்தில் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றிக்காக கையெழுத்து ஈடுவதற்காக ஜான் என்கிற சாணக்கியா மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் சென்று விட்டு திருப்பூரை நோக்கி அவர்களது காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது, ஈரோடு அடுத்த நசியனூர் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது இவர்களது காரை பின் தொடர்ந்து மற்றோரு காரில் வந்த மர்ம நபர்கள் இவர்களது காரின் மீது மோதி நிறுத்தினர்.
காரை நிறுத்திய உடனே காரில் இருந்து இறங்கி மர்ம நபர்கள் ஜானை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே ஜான் இறந்து விட்டநிலையில் கொலை சம்பவத்தை தடுக்க சென்ற அவரது மனைவி சரண்யாவிற்கு கைகளில் வெட்டுப்பட்டத்தை தொடர்ந்து அவர் நசியனூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் அனுப்பி வைத்த நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் சித்தோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ஒருவருக்கு கைகளில் வெட்டு காயங்களுடன் பிடிபட்ட நிலையில் தப்பியோடிய மற்ற மூன்று பேரை பச்சப்பாளி அருகே பவானி டி.எஸ்.பி.ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.
துப்பாக்கி சூட்டில் பிடிபட்ட இவர்கள் சேலம் மாவட்டம் இச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், சரவணன்,பூபாலன் ஆகிய மூன்று பேர் என்பதும் பெருந்துறை அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கோவை அழைத்து சென்றனர்.
இதனிடையே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஜான் என்கின்ற ஜானகியாவை நபர்கள் காரில் வெட்டும் பதபதக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சேலம் பிரபல ரவுடி ஜான் கொலையின் பின்னணி பாக்கும் போது ஜான் என்ற சாணக்கியா-வின் தந்தை சாமிதாஸ் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார்.
ஜான் என்ற சாணக்கியமும் சேர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்தார் இவர்கள் பிச்சிப்பாளையத்தில் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சூரி என்பவரின் மகன்களுக்கும் , ஜான் கோஷ்டிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டது.
நாளடைவில் அது மோதலாக மாறி சூரியன் மகன் நெப்போலியன் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜான் மற்றும் அவரது நண்பர்கள் படுகொலை செய்தனர் இந்த கொலையில் பிரபல ரவுடி செல்லதுரை ஜான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே கோஷ்டியில் இருந்த செல்லதுரைக்கும் ஜானுக்கும் இடையே பின்னர் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி செல்லதுரையை ஜான் மற்றும் அவரது நண்பர்கள் 20 பேர் சேர்ந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
அதாவது ஜான் சிறையில் இருந்தபோது பல்வேறு ரவுடிகளுடன் பழக்கத்தை வைத்துக்கொண்டு , கன்னியாகுமரி , திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள கூலிப்படையினரை அழைத்து வந்து செல்லதுரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
ரவுடி செல்லதுரை மற்றும் நெப்போலியன் ஆகியோரின் கொலை வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ரவுடி சூரியின் மகன் நெப்போலியன் கொலை வழக்கு சேலத்தில் இருந்து வந்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் போலீசாரின் தீவிர நடவடிக்கையின் காரணமாக ரவுடி ஜான் திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டு அவரும் அவரது மனைவியும் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது , சித்தோடு அருகே கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி , பின்னர் ரவுடி ஜானை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
ஜான் மீது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட செல்லதுரையின் ஆட்கள் இந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளனர் என்பது கூறப்படுகிறது. இதனிடையே பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த கொலை கும்பலிடம் விசாரணை எடுத்த கோவை சரக டி ஐ ஜி சசி மோகன் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி ஏ ஜி,கொலையின் புகார் அடிப்படை வழக்கு பதிவு செய்து விசாரணை ஏற்பட்ட வருகின்றனர். தகவல் அடிப்படையில் காவல் ஆய்வாளர் உட்பட பிடிக்க சென்றபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று நபர்கள் பிடிக்கபட்டனர். இவர்களின் வழக்கு பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 4 நபர்கள் கைது செய்து விசாரணை பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu