ஈரோடு: சென்னிமலை அருகே முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேர் கைது: ரூ.54 ஆயிரம் அபராதம்!

சென்னிமலை அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேரை பிடித்த வனத்துறையினர் ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வனப்பகுதிக்கு உட்பட்ட புளியம்பாளையம் பகுதியில் ஈரோடு வனச்சரக அதிகாரி சுரேஷ், சென்னிமலை வனத்துறை அதிகாரி முருகன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சேலம் மாவட்டம் சங்க கிரி மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 25), வடிவேல் (32), பிரகாஷ் (35) ஆகிய மூவரும் நாட்டு துப்பாக்கி வைத்து, முயலை வேட்டையாட முயற்சி செய்யும் போது கையும், களவுமாக பிடிப்பட்டனர்.
அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் மாவட்ட வன அலுவலர் முன் ஆஜர்படுத்தினர். அவர் நபர் ஒருவருக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu