ஈரோடு மாவட்டத்தில் 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தின் மக்கள் தொகை 24 லட்சம் ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 29-ந் தேதி வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 14 லட்சத்து 16 ஆயிரத்து 451 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 22 ஆயிரத்து 808 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 34 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?