/* */

கோபிசெட்டிபாளையம் அருகே இன்று அதிகாலை வீட்டில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் இன்று அதிகாலை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே இன்று அதிகாலை வீட்டில் தீ விபத்து
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாவாயம்மாள் (வயது 80). பாவாயம்மாள் இவரது அண்ணன் மகன் பராமரிப்பில் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை பாவாயம்மாள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட, அக்கம் பக்கத்தினர், பாவாயம்மாளை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி தீயணைப்பு துறையினர், வருவதற்குள் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தக்க சமயத்தில் தீ விபத்தில் இருந்து மூதாட்டியை மீட்டதில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, பங்காளப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?