/* */

ஜம்பையில் வாழைத் தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ விபத்து

பவானி அருகே உள்ள ஜம்பையில் வாழைத் தோட்டத்தில், மின் கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஜம்பையில் வாழைத் தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ விபத்து
X

வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஜம்பை மாரமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில், வாழை பயிரிட்டு உள்ளார். இவரது தோட்டத்தின் மேலே செல்லும் மின் கம்பி திடிரென அறுந்து கீழே விழுந்தது. இதில் கீழே கிடந்த வாழை சறுகில் ஏற்பட்ட தீ, வாழைத்தோட்டம் முழுவதும் பிடித்து எரிய தொடங்கியது.

இதை பார்த்த விவசாயி செந்தில்குமார் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஐந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  5. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  6. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  7. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  8. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  9. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  10. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...