/* */

மூதாட்டி கொலை வழக்கில் சிக்கிய இளைஞர்

மூதாட்டி கொலை வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தங்கநகை,பணம், செல்போன் பறிமுதல் செய்து சிறைக்கு அனுப்பினர்.

HIGHLIGHTS

ஈரோடு மாணிக்கம் பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாக இருந்த 68 வயதான மணிமேகலை என்ற மூதாட்டியை நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

மேலும் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அக்கம்பக்கத்தினரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது மூதாட்டி மணிமேகலைக்கு அடிக்கடி கார் ஓட்டுவதற்காக வரும் இளைஞர் சம்பவத்தன்று வந்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து கருங்கல்பாளையம் அருகே இருந்த அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் மகேந்திரன்(எ) மகேஸ்வரன்(எ) பிரபு என்பதும் மூதாட்டி மணிமகலை அணிந்திருந்த நகைக்காக கொலை செய்ததையும் ஒப்பு கொண்டார்.

இதனையடுத்து ஆதாய கொலையாக வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து தங்கநகைகள்,பணம் , செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகாவலக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 5 May 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்