/* */

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்

ரேஷனில் வழங்கப்படும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம், ஈரோட்டில் இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
X

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரிசி கார்டு வைத்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் ஜூன், 3 முதல் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
எனினும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கொரோனா நிவாரண நிதியில் முதல் கட்ட தொகையாக, 2,000 ரூபாயை இம்மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டார். இன்று முதல், 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் உதவிடும் வகையில், உடனடியாக, இன்று முதல் கொரோனா முதற்கட்ட நிவாரணத் தொகை, 2,000 ரூபாய் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து, 13,910 ரேஷன் கார்டுகளுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்தார்.

ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்றுமுதல் வரும் 12ஆம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதில் தொகை பெறுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கன் வினியோகிக்கும் பணி முடிந்தவுடன் வரும் 15ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் ரூ. 2000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள அந்த நாட்களில் அந்த குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் வந்து நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 May 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்