/* */

ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு சென்னிமலை சாலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்.

ஈரோடு மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்தது. குறிப்பாக இன்று அதிகாலை 3:30 மணி முதல் காலை வரை பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரயில்வே பணிமனை அருகே உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சென்னிமலை ரோட்டில் விழுந்தது. அந்தச் சுற்று சுவரில் ஏற்கனவே கழிவு ஆயில் சூழ்ந்திருந்தது.

இடிந்த சுவற்றில் இருந்த கழிவு ஆயிலுடன் மழை நீரும் சேர்ந்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்து சீர் செய்தனர். இதனையடுத்து இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 Aug 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  3. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  4. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  5. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  6. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...