/* */

'சதம்' தொடும் பெட்ரோல் விலை: வதைபடும் வாகன ஓட்டிகள்

ஈரோட்டில் பெட்ரோல் விலை 25 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.99.22-க்கு விற்பனையாகி வரும் சூழலில், விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சதம் தொடும் பெட்ரோல் விலை: வதைபடும் வாகன ஓட்டிகள்
X

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதன் பின்னர், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 தாண்டியது. தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.97 - க்கு விற்பனையானது. ஆனால் இன்று 25 பைசா அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100 -ஐ நெருங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல் ஒரு லிட்டர் டீசல் நேற்று ரூ.93.16-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 25 பைசா அதிகரித்து ரூ.93.41-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 22 Jun 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது