/* */

பழ வியாபாரியிடம் ரூ. 35 லட்சம் பறிமுதல்

ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு அருகே பழ வியாபாரியிடம் ரூ. 35 லட்சம் பறிமுதல்

HIGHLIGHTS

பழ வியாபாரியிடம் ரூ. 35 லட்சம் பறிமுதல்
X

சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று வீரப்பம்பாளையம் பிரிவு அருகே நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி பிரபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.

ஆனால், அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் நசீர் ஷேக் மூகமது பாஷா என்பதும், அவர் பழ மொத்த வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நிலை கண்காணிப்புக் குழுவினர் அந்த பணத்தை கைப்பற்றி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 19 March 2021 4:57 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?