/* */

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்-ஈரோடு கலெக்டர்

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்-ஈரோடு கலெக்டர்
X

ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறினார்.

ஈரோடு மேற்கு தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கான பொருட்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உள்ளூர் போலீசாருடன், கூடுதலாக சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் 8 குழுவினர் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் . சாலை வசதி இல்லாத கத்திரி மலை வாக்குச்சாவடிக்கு பொருட்களை கொண்டு செல்ல, கழுதைகள் கிடைக்கவில்லை என்பதால் தலைச்சுமையாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. வீடியோ கண்காணிப்பு குழுவில் இருந்தவர்கள் பறக்கும் படைக்கு மாற்றப்பட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதலாக 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் புகார்கள் அதிகம் வருகிறது.அரை மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி தீர்வு காண்பார்கள். வாக்குச்சாவடி மையங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 5 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  4. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  5. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  6. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  9. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  10. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...