/* */

ஈரோடு மாவட்டத்தில் குறைந்த வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் குறைந்த வாக்குப்பதிவு
X

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலை விட 2.48 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,741 வாக்குச்சாவடியில் நடந்தது. வாக்குப்பதிவின் இறுதி நேரமான நேற்று இரவு 7 மணி முடிவின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.23 சதவீதம், ஈரோடு மேற்கு தொகுதியில் 69.35சதவீதம், மொடக்குறிச்சி தொகுதியில் 75.26சதவீதம், பெருந்துறை தொகுதியில் 82.50 சதவீதம், பவானி தொகுதியில் 83.70சதவீதம், அந்தியூர் தொகுதியில் 79.74சதவீதம், கோபி தொகுதியில் 82.91சதவீதம், பவானிசாகர் தொகுதியில் 77.27சதவீதம் என 8 சட்டமன்ற தொகுதியும் சேர்த்து 76.91சதவீதம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இது ஒருபுறமிருக்க கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 79.39சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 2.48சதவீதம் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கு கொரோனா அச்சுறுத்தல் ,கோடை வெயில், வெளியூர் பயணம் போன்றவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

Updated On: 7 April 2021 9:55 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு