/* */

ஈரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 தங்க நாணயங்கள் பறிமுதல்

ஈரோட்டில் இன்று தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 தங்க நாணயங்கள் பறிமுதல்
X

ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்தக் காரை பவானியை சேர்ந்த சிங்காரவேலன் (41) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. சிங்கார வேலன் பவானியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். காரை சோதனை செய்ததில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 30 தங்க நாணயங்கள் இருந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.

இந்த தங்க நாணயங்களுக்கு உரிய ஆவணங்கள் சிங்காரவேலனிடம் இல்லை.இந்த தங்க நாணயங்களை ஈரோட்டில் உள்ள ஒருவருக்கு எடுத்துச் சென்றதாக அவர் கூறினார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் 30 தங்க நாணயங்களை பறிமுதல் செய்து ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர். இந்த தங்க நாணயத்துக்குரிய ஆவணங்களை காண்பித்து பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!