/* */

ஈரோடு மாவட்டத்தில் 23 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 23 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு. -கலெக்டர் கதிரவன் பேட்டி.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 23 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


இதுதவிர கலெக்டர் கதிரவன் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதமும், சீல் வைத்து வருகிறார். அதன்படி இன்று கலெக்டர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள், சூரம்பட்டி நால்ரோடு, பெருந்துறை ரோடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஒவ்வொரு மக்களும் பொறுப்புடன் செயல்பட்டு முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பெருந்துறை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முழு நேர கொரோனா ஆஸ்திரியாக மாற்ற பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான ஆக்சிஜன், மருந்து, போதுமான அளவு டாக்டர்கள் செவிலியர்கள் உள்ளனர். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் பேர் தங்கும் அளவுக்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 23 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான காய்கறி உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 13 April 2021 4:24 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!