/* */

கோடை வெயில் சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் ஈரோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணாடி, தொப்பி, குளிர்பானம் வழங்கினார்.

HIGHLIGHTS

கோடை வெயில் சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை
X

கோடைகாலம் துவங்குவதற்கு முன்னதாகவே, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து சீரமைப்பு பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு இது சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து போலீாருக்கு இன்று முதல் தினசரி இரு வேளைகளில் குளிர்பானம் மற்றும் மோர் வழங்கும் திட்டத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை துவக்கி வைத்தார். மேலும் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் கண்ணாடி, தொப்பி ஆகியவையும் வழங்கப்பட்டது.

Updated On: 8 March 2021 7:57 AM GMT

Related News