ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட தியாகராஜன்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வ.உ.சி. பூங்கா பின்புறம், 25வது கேட் அருகில் வெடிகுண்டு உள்ளது. சில மணி நேரத்தில் வெடிக்க உள்ளது எனக்கூறி உடனே அழைப்பு துண்டித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

அதன் பின்னர், நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், திருச்சியை சேர்ந்த தியாகராஜன் என்பதும், அவர் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் 2 மாதங்கள் பணியாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் வேலை பார்த்த சோப்பு கம்பெனிக்கு சென்ற போலீசார் தியாகராஜன் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறினர்.

இந்நிலையில், ஈரோடு மூலப்பட்டறையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தியாகராஜனை கைது செய்தனர்.

Next Story
Similar Posts
ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் தொடக்க விழா
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனை
சித்தோடு அருகே சொகுசு பேருந்தில் ½ கிலோ தங்கம், 18 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல்: தொழில் அதிபர் கைது
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா
குமாரபாளையத்தில் 2 பள்ளி மாணவர்கள் மாயம்
ஈரோடு காரப்பாறையில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்!
சமாதானம் பேச வந்த மனைவியின்    தாயை அடித்த மாப்பிள்ளை
போதையில் பஸ் ஓட்டுநரை தாக்கி, தலைமறைவான 3 பேர்
சக்தி பாலிடெக்னிக் கல்லூரி விழா
சேலத்தில் குடிநீர் குழாய் உடைப்பு, உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை
ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில் நகை கண்காட்சி
கழிவு நீருடன் மாசு பாய்ந்த காவிரி ஆறு
வெறிநாய்களின் அட்டகாசத்தால், 1,800 கால்நடைகள் உயிரிழப்பு