/* */

அருள்வாக்கு பெண் சாமியார் குறித்து ஈரோடு போலீசார் விசாரணை

அன்னபூரணி அரசு அம்மா என்ற திடீர் பெண் சாமியார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரா? என ஈரோடு மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை.

HIGHLIGHTS

அருள்வாக்கு பெண் சாமியார் குறித்து ஈரோடு போலீசார் விசாரணை
X

அன்னபூரணி.

"அன்னபூரணி அரசு அம்மா" என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திடீர் பெண் சாமியார் அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது அன்னபூரணி சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகியுள்ளார்.

இந்நிலையில், ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர், திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அருள் வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர் ஓட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து அன்னபூரணி அம்மா ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆதிபராசக்தி அன்னபூரணியின் நிகழ்வுகள் ஏதேனும் நடைபெற்றதா? கொரானா விதிமுறைகளைப் பின்பற்றாமல் காவல்துறையினருக்கு தெரியாமல் நிகழ்ச்சிகள் ஏதேனும் நடத்தினரா? என்பது குறித்தும், வேறு ஏதேனும் வழக்குகள் பதியப்பட்டனவா? என்பது குறித்தும் ஈரோடு மாவட்ட காவல்துறையின் சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 28 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது