ஈரோடு - பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று இயக்கம்

ஈரோடு - பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று  இயக்கம்
X

ஈரோடு- பாலக்காடு பயணிகள் ரயில் இயக்கம்.

ஈரோடு - பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இயக்கப்பட்டது

ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்கு கிளம்பி கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு செல்லும். இதேபோல் பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு கிளம்பும் ரயில் கோவை வழியாக ஈரோட்டிற்கு இரவு 7.10 மணிக்கு வந்தடையும். ஈரோட்டில் இருந்து கோவை , திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் அனைத்தும் ரயில்வே நிர்வாகம் இயக்க துவங்கி உள்ளது.

இந்நிலையில், ஈரோடு-பாலக்காடு ரயில் இன்று முதல் மெமு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. ஈரோடு-கோவைக்கு கட்டணமாக ரூ.50. ஈரோடு-பாலக்காடு கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture