/* */

ஈரோடு பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம்; மாநகராட்சி ஆணையர் தகவல்

ஈரோடு பஸ் நிலையம் விரைவில் சி.என்., கல்லூரி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம்; மாநகராட்சி ஆணையர் தகவல்
X

ஈரோடு பஸ் நிலையம்.

ஈரோடு சத்தி சாலை, நாச்சியப்பா சாலை, மேட்டூர் சலை ஆகிய மூன்று பகுதிகளின் மையப்பகுதியில் மாநகராட்சி பஸ் நிலையம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பஸ் நிலையம் புனரமைப்பு செய்யப்படுகிறது. பஸ் நிற்கும் ரேக்குகள், மேற்கூறை நடைபாதை, பழைய கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அதற்கான பராமரிப்பு பணிகள் ரூ.40 கோடியில் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக முதலில் சேதமடைந்த தூண்கள் அமைந்த பகுதி அடைக்கப்பட்டது. அடுத்து பழைய கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக பஸ் நிலையம் சி.என்., கல்லூரி மைதானத்துக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. அதில் காம்பவுண்டு சுவர், சக்தி சாலை பகுதியில் உள்ள பழைய கட்டடம் இடிக்கப்பட்டு சுரங்க வாகன நிறுத்தம், வணிக வளாகம், மினி பஸ் நிறுத்த அமைக்கப்படுகிறது.

கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கும் முன், பஸ் நிலையம் சி.என்., கல்லூரி மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பபடுகிறது. வருகிற ஆகஸ்ட் இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்படும். இதற்காக அங்குள்ள கடைகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு பஸ் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஏற்கனவே 15 கடைகள் சேர்ந்தவர்கள் காலி செய்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் கடைகளை காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளனர்.

சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.இதில் கரூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும்.

இதேபோல் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ள சிஎன்சி கல்லூரி மைதானத்தில் உள்ள பஸ் நிலையத்தில் கோவை, சேலம் , திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து வரும் பஸ்களும், டவுன் பஸ்களும் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Aug 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்