/* */

ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்புலிகள் கட்சியின் தேனி மாவட்ட துணைச்செயலாளர் படுகொலையை கண்டித்து, ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில், கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேனி மாவட்டத்தில் நேற்றிரவு, தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசை, மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்த படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் இன்று, கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், தமிழகத்தில் தொடரும் சாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 22 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு