/* */

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 லட்சம் அபராதம் வசூல் 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் , முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 லட்சம் அபராதம் வசூல் 
X

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு, பெருந்துறை ரோடு திருநகர் காலனி, நாச்சியப்பா வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனையின் போது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து, முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதனால், தற்போது முக கவசம் அணிந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல், தற்போது வரை, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது புதிதாக தொற்று ஏற்பட்டவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கிரீனிங் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அங்கு நுரையீரல் உள்ளிட்ட 5 வகையான பரிசோதனை செய்யப்பட்டு தொற்று தீவிரம் கண்டறியப்படுகிறது. பின்னர் டாக்டரின் ஆலோசனையின்படி அவர்கள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொற்று பாதிப்பு குறைவாக இருந்தால் வீட்டு தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தனிமையில் இருப்பதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒரேதெருவில் மூன்று குடும்பங்களுக்கு மேல் தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் மாநகராட்சியில் சேக்கிழார் வீதி மட்டும் தற்போது கட்டுப்பாட்டுப் பகுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

Updated On: 20 April 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு