/* */

மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி : எஸ்.பியிடம் புகார்

மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு.

HIGHLIGHTS

மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி : எஸ்.பியிடம் புகார்
X

எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த மிளகு வியாபாரி.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இன்று எஸ்.பி.அலுவலத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மிளகு மற்றும் மஞ்சள் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த மாதம் 20ஆம் தேதி கேரளாவிற்கு சென்று உங்கள் ஒரு டீலரிடம் 2500 கிலோ மிளகு பெற்று ஈரோடுக்கு வந்தேன். இங்கு உள்ள ஒரு ஜவுளி உரிமையாளர் இடம் 1820 கிலோ மிளகு விற்பனை செய்தேன். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 21 ஆயிரத்து 730. கடனாகப் கொடுத்தேன். பின்னர் அன்று இரவு அந்த ஜவுளி உரிமையாளர் குடோனுக்கு சென்றேன். ஆனால் அந்த ஜவுளி உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மகன் பணத்தைத் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பலமுறை அவர்களிடம் பணம் கேட்டும் பணம் தரவில்லை. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி மீண்டும் அவர்கள் குடோனுக்கு சென்று பார்த்தோம். அப்போது அவர்கள் குடோனை காலி செய்து சென்றுவிட்டனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்கள் வீட்டுக்கு சென்று பணம் கேட்டோம். அப்போது அவர் அவரது மனைவி மற்றும் மகன் மூவரும் சேர்ந்து என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். என்னிடம் ரூ. 8 லட்சத்து 21, 730 மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Updated On: 7 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு