ஈரோட்டில் 2ம் நாளாக மழை

ஈரோட்டில் 2ம் நாளாக மழை
X
ஈரோட்டில் இரண்டாம் நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வெப்ப காற்றுடன் கடுமையான வெயில் வாட்டி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அதிகபட்சமாக 106 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையை போலவே இரண்டாம் நாளாக நேற்றும் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நள்ளிரவு வரை பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ச்சியடைந்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் வெப்பத்தால் வாடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future