/* */

போக்சோ சட்டத்தில் 2வது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்: டி.ஐ.ஜி

போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

போக்சோ சட்டத்தில் 2வது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்: டி.ஐ.ஜி
X

ஈரோட்டில், காக்கும் கரங்கள் குழுக்கள் சார்பில், பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி.

ஈரோட்டில், காக்கும் கரங்கள் குழுக்கள் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கோவை ,ஈரோடு, நீலகிரி ,திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில், காவல்துறை செயல்பாடு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் காக்கும் கரங்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 10 துறைகளைச் சேர்ந்தவர்கள், கிராம பஞ்சாயத்தை சிறந்தவர்கள் தன்னார்வலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 34 குழுக்களாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், போன மாதத்தை விட இந்த மாதம் குறைந்து உள்ளது .இது வரவேற்கத்தக்கது. ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று, ஒருநாள் குழந்தைகள் நலம் சார்ந்ந பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த 34 குழுக்கள் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே 450 கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஈரோட்டில் 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.

அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ வழக்குகள் பதிவாகின. ஜூலை மாதம் 6 ஆக குறைந்துள்ளது. போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 22 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!