/* */

சோலாரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சோலாரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சோலாரில்  தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் தகவல்
X

பைல் படம்.

ஈரோடு பஸ் நிலையம் ஈரோடு மாநகர மையப்பகுதியில் அமைந்துள்ளது. இட நெருக்கடியான இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் பஸ்கள் வந்து செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும் ரேக்குகள், மேற்கூரை, தூண்கள் நடைபாதை மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளது.

இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

இங்கு புதிய கட்டிடங்கள் கட்டவும் நவீன கழிப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாட்டு பணிகளை பல்வேறு கட்டங்களாக நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக முதற்கட்டமாக கரூர் திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ் நிற்கும் பகுதியில் பணிகளை செய்யவும் தென் மாவட்ட பஸ்களை மட்டும் வேறு இடத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சோலாரில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அங்கு தென் மாவட்ட பஸ்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பஸ் நிலையத்தில் மேம்பாடு பணிகள் நடைபெற இருப்பதால் தென்மாவட்ட பேருந்துகள் மட்டும் இயக்கும் வகையில் சோலாரில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உணவு வசதி போன்றவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பணிகள் தொடங்கப்படும்.

இதன் பின்னர் ஈரோடு மாநகர பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போது முதற்கட்டமாக தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் ரேக்குகளில் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடங்க உள்ளது. மற்ற ரேக்குகளில் உள்ள பஸ்கள் வழக்கம்போல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 27 Aug 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?