/* */

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக வி.சசிமோகன் நியமனம்

ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.சசிமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக வி.சசிமோகன் நியமனம்
X

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பி.தங்கதுரை, கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டு முடிந்த நிலையில் அவரை மதுரை சிட்டி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. பி. தங்கதுரிஅக்கு பதிலாக ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரி வி.சசிமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறிவிப்பினை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார். புதியதாக பொறுபேற்க உள்ள போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்து, தற்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது, தொலைதூரத்தில் உள்ள மலைக்கிராம மக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக தனிசெயலி (ஆப்) புகார் முறையை அறிவித்து மக்கள் மத்தியில் நல்லப்பெயரை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Jun 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க