/* */

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக வி.சசிமோகன் நியமனம்

ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.சசிமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக வி.சசிமோகன் நியமனம்
X

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பி.தங்கதுரை, கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டு முடிந்த நிலையில் அவரை மதுரை சிட்டி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. பி. தங்கதுரிஅக்கு பதிலாக ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரி வி.சசிமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறிவிப்பினை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார். புதியதாக பொறுபேற்க உள்ள போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்து, தற்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது, தொலைதூரத்தில் உள்ள மலைக்கிராம மக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக தனிசெயலி (ஆப்) புகார் முறையை அறிவித்து மக்கள் மத்தியில் நல்லப்பெயரை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Jun 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது