26,872 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி

26,872 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில் இதுவரை 26,872 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 1 ம் தேதி முதல் நேற்று வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 26,872 முதியோர், மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story