/* */

நிலம் ஆக்கிரமிப்பு : திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

நிலம் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக பிரமுகர் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிலம் ஆக்கிரமிப்பு : திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்
X

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் நில அபகரிப்பு புகார் அளித்த, ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜிக்கு சொந்தமான, ஈரோடு மாவட்டம் ஆசனுர் பகுதியில் 5 அறைகளுடன் கூடிய 75 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த இடத்திற்கு அருகே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் தாரை மணியன் என்பருக்கு சொந்தமான 2.10 ஏக்கர் காலி நிலம் உள்ளது.

இந்நிலையில், திமுக பிரமுகர் தாரை மணியன், தன்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இது குறித்து தாரை மணியனிடம் கேட்டதற்கு, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுதாகவும் கூறி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பழனிச்சாமி தரப்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடும் திமுக பிரமுகர் தாரை மணியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு