/* */

லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவர் பலி

ஈரோட்டில் லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவர் உடல் நசுங்கி பலி.

HIGHLIGHTS

லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவர் பலி
X

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. இதற்காக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் சென்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அரிசி மூட்டை பாரம் ஏற்றிக்கொண்டு இன்று சரக்கு லாரி ஒன்று ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி கருங்கல்பாளையம் காவேரி மீன் மார்க்கெட் அருகே வந்தபோது, அவ்வழியாக சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோதியது.

இதில், நடந்து சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், இறந்து போனவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய சேலம் மாவட்டம் வாழப்பாடி பொன்னாரம் பட்டியை சேர்ந்த ரவி மகன் ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Jun 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை