Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 79 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 526 பேருக்கு பரிசோதனை செய்ததில், 77 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 164 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 682 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 837 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.