Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 97 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மேலும் 76 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 97 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 28ம் தேதி சிகிச்சை பெற்று வந்த 72 முதியவரும் , 29ம் தேதி 37 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 684 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனை செய்ததில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%