Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 689 பேருக்கு கொரோனா
இன்று மட்டும் 1,023 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 355 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 813 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் புதிதாக இன்று 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 573 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 1,023 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 8 ஆயிரத்து 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 725 பேர் பலியாகி உள்ளனர்.