Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 112 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 47 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று புதிதாக 38 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 458 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 884 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 112 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி 74 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு இதுவரை 734 பேர் பலியாகி உள்ளனர்.