ஈரோடு மாவட்டத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்

ஈரோடு மாவட்டத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்
X
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.;

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜி.ஜவகர், தற்போது சி.பி.சி.ஐ.டி. வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, திருப்பூர் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளராக பணியாற்றி வந்த ஏ.சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் ஈரோடு மாவட்டத்துக்கு வந்து பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story