ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 'பூஜ்ஜியம்'

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம்
X
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம் நிலையை அடைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், இன்றைய கொரோனா பாதிப்பு, முதல்முறையாக ஜீரோ என்ற நிலையை அடைந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளால், பொதுமக்களின் முழு ஓத்துழைப்பாலும், இந்த நிலையை எட்ட முடிந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே நிலையை தொடர வேண்டுமென்றால் பொதுமக்கள் தவறாமல் கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்டத்தில் இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future