/* */

ஈரோடு: பாலியல் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி

பள்ளிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஈரோடு: பாலியல் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மாணவ -மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அல்லது தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மாணவ- மாணவிகள் தங்கள் பிரச்சனையை குறித்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகார் பெட்டிக்கும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மாவட்ட கல்வி அலுவலகத்திலும், மற்றொரு சாவி அந்தந்த பள்ளிகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் இருக்கும். புகார் பெட்டி குறிப்பிட்ட நாட்களில் ஒருமுறை திறக்கப்படும். புகார் பெட்டியில் யார் மீதாவது புகார் இருந்தால் அது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்