/* */

ஈரோடு பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஈரோடு மணிக்கூண்டு, பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ். 

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ஈரோட்டில் பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வைத்துள்ளதாகவும் இந்த மூன்று இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்று கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து சென்னை போலீசார் ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார் படுத்தினர். இதையடுத்து போலீசை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஒவ்வொரு நடைமேடை, ரயிலிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்தே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த போன் நம்பர் வைத்து அந்த நபர் இருக்கும் இடத்தை டவுன் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மேட்டுப்பாளையத்தை சந்தோஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். சந்தோஷ் தனது மனைவியை பிரிந்து சற்று மனநலம் பாதித்தவர் போல் இருந்துள்ளார்.

ஏற்கனவே சந்தோஷ் இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும், ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இரண்டு முறை போன் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி, மற்றும் ரயில்வே போலீஸ் நிலையத்தில் சந்தோஷ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சந்தோஷ் கைதாகியுள்ளார்.

Updated On: 4 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  3. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  4. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  5. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  6. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...