Begin typing your search above and press return to search.
சித்தோடு ஆவின் பூத்-யில் விற்பனை செய்த உணவில் புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
சித்தோடு ஆவின் பூத்யில் விற்பனை செய்த உணவில் புழு இருந்ததால் மீதம் இருந்த உணவை அதிகாரிகள் அழித்தனர்.
HIGHLIGHTS
சித்தோடு தலைமை ஆவின் பாலகம் முன்பு ஆவின் பூத் செயல்பட்டு வருகிறது. இங்கு கார்த்திக் என்பவர் தயிர் சாப்பாடு வாங்கியுள்ளார். அதில் சிறிய புழு இருப்பதை கண்ட கார்த்திக் உடனடியாக கடை ஊழியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு மீதம் இருந்த உணவை அழித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.