/* */

அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில் வினோதம்

கருங்கல்பாளையம் அழகு பட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில், அரிவாள் மீது நடந்து பூசாரி அருள்வாக்கு அளித்தார்.

HIGHLIGHTS

அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில் வினோதம்
X

கருங்கல்பாளையம் பட்டுமாரியம்மன் கோவிலில், அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு அளித்த பூசாரி.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அழகு பட்டு மாரியம்மன் கோவில். இக்கோவில் 70 ஆண்டு கால வரலாற்று சிறப்புமிக்கது. இங்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக, கொரோனா விதிமுறைகள் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவை முன்னிடு, செங்குட்டுவன் நகர் மக்களால், கடந்த 4 ம் தேதி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, நேற்று கோவிலில் முக்கிய விழாவான தீர்த்தம் எடுத்தல், அலகு குத்தி நடனம் ஆடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா முடிவில், கோவிலின் தலைமை பூசாரி ஜோதிமணி அரிவாளுடன் நடந்தபடியே கோவிலை சுற்றி வந்தார். தொடர்ந்து வரிசையில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும்வெந்நீர் பானையின் மீது கால் ஊன்றி நடந்தும், அரிவாள் மீது நின்றும், அருள் வாக்கு அளித்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் ஏராளமானோர், கோவில் முன்பாக குவிந்து, பூசாரி ஜோதிமணியிடம் அருள் வாக்கு பெற்று சென்றனர்.

Updated On: 7 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?