/* */

பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

HIGHLIGHTS

பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
X

புகார் அளிக்க வந்தவர்கள்.

ஈரோடு அடுத்துள்ள அத்தானியை பகுதியை சேர்ந்தவர் வேலு என்கிற மருதமுத்து. இவர் அதிமுகவில் அத்தானி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் என அறிமுகமாகிய இவர், கால்நடை உதவியாளர் பணி உட்பட பல்வேறு பணிகள் அரசு துறையில் காலியாக இருப்பதாகவும் அதனை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய பொதுமக்கள் இவரிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிமுக அத்தானி செயலாளர் வேலு கூறியபடி வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக அவர்மேல் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவயை பற்றி விசாரிக்கையில், அவர் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிமுக செயலாளர் வேலு மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரகோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Updated On: 29 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு