/* */

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்: சிறுதொழில்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்: சிறுதொழில்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
X

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க (ஈடிசியா) பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் திருமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இரும்பு, பிளாஸ்டிக், ஜவுளி நூல் போன்றவற்றின் மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். காகித பொருட்கள், அட்டைகளுக்கான ஜி.எஸ்.டி. சமீபத்தில், 12 சதவீத்ததில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது காகித தொழிலை கடுமையாக பாதிக்கும். காகித பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மறுசுழற்சி செய்யலாம். எனவே ஜி.எஸ்.டி. உயர்வை திரும்ப பெற வேண்டும்.

பேக்கிங் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது, மாற்று ஆதாரங்கள் இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. பேக்கிங்குக்கான மாற்று பொருள் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தை கோவை மற்றும் சேலத்தில் முன்மொழியப்பட்ட தொழில் வழிப்பாதை திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பிரச்சினையை காரணம் காட்டி அதிகாரிகளால் பல தொழிற்சாலைகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கையை குறைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கான ஏற்றுமதி முனையம் நிறுவப்பட வேண்டும். பெருந்துறை சிப்காட்டில் ரயில் சரக்கு முனையும் நிறுவ வேண்டும். தொழில் துறையில் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயலாளர் ராம்பிரகாஷ், துணைத்தலைவர்கள் ஸ்ரீதர், கந்தசாமி, பொருளாளர் பழனிவேல், இணைச்செயலாளர் சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 19 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து