/* */

அதிகாரிகள் குடியிருக்க வழிகாட்டிய இடத்தில் குடியிருக்க விடாமல் தடுத்து வக்கீல் மிரட்டல்

அதிகாரிகள் குடியிருக்க வழிகாட்டிய இடத்தில் குடியிருக்க விடாமல் தடுத்து வக்கீல் ஒருவர் மிரட்டல் விடுப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

HIGHLIGHTS

அதிகாரிகள் குடியிருக்க வழிகாட்டிய இடத்தில் குடியிருக்க விடாமல் தடுத்து வக்கீல் மிரட்டல்
X

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் எம்மாம் பூண்டி கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தனர். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் பல ஆண்டுகளாக எம்மாம் பூண்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். பட்டியல் இனத்தை சேர்ந்த எங்களுக்கு சொந்த நிலமோ இடமோ இல்லை. இந்நிலையில் அரசுக்கு கோரிக்கை வைத்த பின்னர், அதிகாரிகள் மணியம்பாளையம் என்ற இடத்தில் குடி அமர கூறினர்.

அதனடிப்படையில் நாங்கள் இருந்த அந்த இடத்தை காலி செய்து அதிகாரிகள் காட்டிய இடத்திற்கு குடியமர பணிகளைச் செய்தோம். இதில் தனிநபர் சென்னியப்பன் என்பவர் எங்களை தடுத்து நீங்கள் யார் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்? உங்களை இங்கு குடி அமர்வதற்கு யார் சொன்னது என மிரட்டும் தொனியில் கேள்வியெழுப்பினார். இதில் ஆட்சியர் விசாரித்து பட்டியலின சமுதாயமான எங்களுக்கு அந்த இடத்தை உறுதி செய்து பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  2. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  4. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  5. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  6. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  8. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...