/* */

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம்
X

மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா முன்னிலையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தொடங்கியது. பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் பவானி மெயின் ரோடு, பழைய காமதேனு திருமண மண்டபத்தில் தொடங்கியது. காவிரி ரோடு வழியாக சென்று சத்திசாலை, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. அங்கு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம் எல் ஏ திருமகன் ஈவெரா பேசினார்.

Updated On: 29 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு