தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

X
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
By - Kumar, Reporter |1 Nov 2021 8:30 PM IST
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் திண்டலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் திண்டலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள், நிலை I பணியிடங்களை மீளப்பெற்று தொடர்ந்து நிலை நிறுத்தி மக்கள் நலன் காத்திடவேண்டும், ஓய்வில்லாது கொள்ளை நோய்த் தடுப்பு பணியாற்றி வரும் 900 சுகாதார ஆய்வாளர்கள். நிலை II பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சுகாதார ஆய்வாளர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu