/* */

திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருக்கோயில் பூசாரிகள், பணியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி புத்தாடைகள் வழங்கினார்.

HIGHLIGHTS

திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் முத்துசாமி. 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபாய் 10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகளுக்கு, பொங்கல் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில், திண்டல்மலை முருகன் கோவிலில், இன்று அமைச்சர் அமைச்சர் முத்துசாமி, அர்ச்சகர்கள் பூசாரிகள் உள்ளிட்ட 381 நபர்களுக்கு பொங்கல் புத்தாடைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திண்டல்மலை முருகனை தரிசித்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...