ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது
X

பைல் படம்.

ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூரம்பட்டி பாரதிதாசன் வீதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை செய்த அருள்ஜோதி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளை தாளில் எண்கள் எழுதியிருந்த 10 சீட்டுகள் மற்றும் 200 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?