/* */

ஈரோட்டில் பட்டாசு வெடிக்க பயன்படும் நீள பத்தி உற்பத்தி தீவிரம்

கனிராவுத்தர் குளம் அருகே சாதிக் என்பவர் கடந்த 42 ஆண்டாக பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் பத்தி தயாரித்து விற்பனை செய்கிறார்.

HIGHLIGHTS

ஈரோடு, சூளை கனிராவுத்தர் குளம் அருகே பச்சைப்பாளிமேட்டில், சாதிக் என்பவர் கடந்த, 42 ஆண்டாக தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் பத்தி தயாரித்து விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து சாதிக் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், 2.5 அடி நீளமுள்ள பத்தி, நான்கு லட்சம் எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம். தீபாவளிக்கு ஐந்து மாதம் முன் உற்பத்தியை துவங்கி, தமிழகம் முழுவதுக்கும், கேரளா, கர்நாடகாவுக்கும் அனுப்பி வைப்போம். இந்தாண்டு ஊரடங்கு, பெங்களுருவில் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் கடந்த ஒரு மாதமாக உற்பத்தி நடப்பதுடன், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பத்தி அனுப்பும் பணி நடக்கிறது.

கடந்தாண்டுகளில் மொத்த விற்பனையில் ஒரு பத்தி, 3 முதல், 3.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வோம். இந்தாண்டு கரித்துாள், மரத்துாள், தென்னங்குச்சி என மூலப்பொருள் விலை உயர்ந்து, 4 முதல் 4.50 ரூபாய்க்கு விற்கிறோம். இதனை குடிசைத்தொழிலாக செய்வதால், அதிகமாக செய்து இருப்பு வைக்க இயலாது.

இப்பத்தியை பாதுகாப்பானதாகவும், குழந்தைகள், பெரியவர்கள் கைகளில் கரித்துாள், மரத்துாள் பட்டாலும் பக்கவிளைவு ஏற்படாமல் செய்வதால், இதனை விரும்பி வாங்குவார்கள். ஒரு பத்தி, ஆறு மணி நேரம் எரியும்படி செய்கிறோம். கடைகளில் இதனை, எட்டு முதல், பத்து ரூபாய்க்கு விற்கின்றனர். இன்னும் தீபாவளிக்கு 15 நாட்கள் உள்ள நிலையில், பத்தி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ளோம், என்றார்.

Updated On: 20 Oct 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு