/* */

திண்டல் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா

திண்டல் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

HIGHLIGHTS

திண்டல் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா
X

திண்டல் முருகன் மலை.

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் ஏராளமான கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் இன்று காலை கந்த சஷ்டி விழா சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. வரும் 9ஆம் தேதி மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, 10-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் 9ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 10-ம் தேதி காலை 6 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதுபோல் விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே காப்பு கட்டி விரதம் இருந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் முன்பு இந்து அறநிலைய துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

Updated On: 5 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...