சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்

ஈரோட்டில் சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்ததால் உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில்  உணவகம் மூடல்
X

சப்பாத்தியில் காணப்பட்ட பூச்சி

ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். துரித உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசவத்திற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவானந்தம், மருத்துவமனையில் இருக்கும் தனது மனைவி மற்றும் தாயாருக்கு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சப்பாத்தி பார்சல் வாங்கி கொண்டு சென்றார். மருத்துவமனை சென்ற அவர் பார்சலை திறந்தபோது சப்பாத்தியில் இருந்து பூச்சி ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர், உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஓட்டல் நிர்வாகத்தினர் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். எனினும் சமாதானமடையாத ஜீவானந்தம் இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலும் சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்து சென்றதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உணவகத்தின் சமையல் அறை சரிவர பராமரிக்கப்படாமலும், போதுமான சுகாதாரம் இல்லாமலும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உணவகத்தை மூடச்சொல்லி உத்தரவிட்ட அதிகாரிகள், குறைகளை நிவர்த்தி செய்த பிறகு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னர் உணவகத்தை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Sep 2023 5:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  2. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  4. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  6. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  7. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
  8. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  9. சிவகாசி
    சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
  10. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு