/* */

காவேரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்னை மீட்ட தம்பதியினர்

காவேரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பரிசலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீட்டனர்.

HIGHLIGHTS

காவேரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்னை மீட்ட தம்பதியினர்
X

காவேரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட தம்பதியினர்.

ஈரோடு கருங்கல் பாளையம் - பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி ஆறு பாலம் உள்ளது. இங்கு இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம். மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

சமீபகாலமாக காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அந்தப்பெண் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக்கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தார் தனபால் (42), அவரது மனைவி வடிவரசி (36) ஆகியோர் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை தங்களது பரிசலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி (36)என்றும், இவரது கணவர் சங்கர் என்றும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக சுமதி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

சுமதி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சுமதி கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமதியை காப்பாற்றிய தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினர்.

Updated On: 18 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...